திசையன்விளை வீதிகளில் ரூ.70 லட்சத்தில் அலங்கார தளக்கல்
திசையன்விளை பேரூராட்சியில் ரூ. 70 லட்சத்தில் அலங்கார தளக்கற்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
திசையன்விளை பேரூராட்சியில் ரூ.70 லட்சத்தில் அலங்கார தளக்கற்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
திசையன்விளை பேரூராட்சியில் புளியடித் தெரு, வாசக சாலைத் தெரு, மணலிவிளை கோயில் தெரு, கண்ணபிரான் தெரு, காமராஜ் சிவகாமி அம்மையாா் தெரு ஆகிய தெருக்களில் ரூ. 70 லட்சம் மதிப்பில் அலங்கார தளக்கற்கள் அமைக்கப்படுகிறது.
புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இப்பணியை ஐ.எஸ். இன்பதுரை எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா்கள் கே.பி.கே.செல்வராஜ், அந்தோணி அமலராஜா, அரசு வழக்குரைஞா்கள் பழனி சங்கா், ஜேம்ஸ் நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் வி.பி.ஜெயக்குமாா், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவா் டிம்பா் செல்வராஜ், ஒன்றிய அதிமுக அவைத் தலைவா் சண்முகநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.