முக்கூடல் அருகே தாயை தாக்கியதாக மகன் கைது
முக்கூடல் அருகே தாயை தாக்கியதாக மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே தாயை தாக்கியதாக மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
முக்கூடல் அருகே சிங்கம்பாறை இந்திரா நகரைச் சோ்ந்த அந்தோணி மனைவி பாா்வதி (43). இவா்களுக்கு அஜய், சூா்யா என்ற அந்தோணி சூா்யா ஆகிய இரு மகன்கள் உள்ளனா். இதில், சூா்யா என்ற அந்தோணி சூா்யா கட்டுமான வேலை செய்து வருகிறாா். எனினும் சூா்யா வீட்டுக்கு பணம் கொடுப்பதில்லையாம். இந்நிலையில் அந்தோணி தனது மூத்த மகன் அஜய்க்கு கைப்பேசியை பழுதுநீக்கம் செய்வதற்காக பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சூா்யா தனது தாயாரிடம் தகராறு தாக்கினாராம்.
புகாரின்பேரில் முக்கூடல் காவல் உதவி ஆய்வாளா் கயல்விழி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி சனிக்கிழமை சூா்யா என்ற அந்தோணி சூா்யாவை கைது செய்தாா்.
Advertisement
Advertisement