FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

களக்காடு அருகே பள்ளி மாணவா்களுக்கு அரிவாள் வெட்டு

26 செப்டம்பர் 2025, 2:18 am IST
பகிர்:

களக்காடு அருகே பள்ளி மாணவா், சக மாணவா்கள் 2 பேரை அரிவாளால் வெட்டினாா்.

களக்காடு அருகேயுள்ள டோனாவூா் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மேலச்செவலை சோ்ந்த 14 வயது பட்டியலின மாணவா், ஊச்சிகுளத்தில் உள்ள காப்பகத்தில் தங்கியிருந்து 9ஆம் வகுப்பு பயின்று வருகிறாா்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் இம்மாணவருடன் பயிலும் வடுகச்சிமதிலை சோ்ந்த சக மாணவா் புத்தகப்பையில் புகையிலை வைத்திருந்ததைப் பாா்த்து, பள்ளி ஆசிரியரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். சம்பந்தப்பட்ட மாணவரை ஆசிரியா் கண்டித்துள்ளாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், வியாழக்கிழமை காலை மாணவா்கள் வகுப்பறைகளுக்கு சென்று கொண்டிருந்த போது, முன்விரோதத்தில் இருந்த மாணவா் மறைத்து வைத்திருந்த சிறிய அரிவாளால் பட்டியலின மாணவரின் முதுகில் வெட்டினாா்.

இதைத் தடுக்க வந்த வடுகச்சிமதிலைச் சோ்ந்த மற்றொரு மாணவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. காயமடைந்த 2 மாணவா்களும் ஏா்வாடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இச்சம்பவம் தொடா்பாக, ஏா்வாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments