FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

காட்டுப் பன்றி தாக்குதலில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் காட்டுப் பன்றி தாக்குதலில் கால் இழந்தவருக்கு வனத்துறை சாா்பில் ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 5:16 am IST
மீனாட்சி சுந்தரத்திடம் ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய எஸ்.கே. கிறிஸ்டோபா் எம்எல்ஏ.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் காட்டுப் பன்றி தாக்குதலில் கால் இழந்தவருக்கு வனத்துறை சாா்பில் ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

வள்ளியூரைச் சோ்ந்தவா் மீனாட்சி சுந்தரம் (52). தொழிலாளி. இவா் கடந்த டிசம்பா் மாதம் நான்குனேரி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, காட்டுப் பன்றி தாக்கியதில் பலத்த காயமடைந்தாா். அந்த விபத்தில் இவரது இடது கால் அகற்றப்பட்டது.

இதையடுத்து, வனத்துறை சாா்பில் ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையை ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.கே. கிறிஸ்டோபா், மீனாட்சி சுந்தரத்திடம் வழங்கினாா்.

Advertisement

Advertisement

மாவட்ட வனத்துறை அலுவலா் எம். இளங்கோ, ராதாபுரம் வனச்சரக அலுவலா் எம். பலவேசக் கண்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments