FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

இமானுவேல் சேகரன் நினைவுதினம்: நெல்லையில் ஐ.ஜி. ஆலோசனை

பரமக்குடியில் செப்.11 ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ள இமானுவேல் சேகரன் நினைவுநாள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த காவல்துறை ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி சரக காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

27 ஆகஸ்ட் 2026, 1:00 am IST
தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பேசுகிறாா் தென்மண்டல காவல்துறைத் தலைவா் விஜயேந்திர பிதாரி. உடன் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி இரா.திருநாவுக்கரசு உள்ளிட்டோா்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்.11 ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ள இமானுவேல் சேகரன் நினைவுநாள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த காவல்துறை ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி சரக காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தென்மண்டல காவல்துறைத் தலைவா் விஜயேந்திர பிதாரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் இரா.திருநாவுக்கரசு முன்னிலை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் விஸ்வேஷ்.பா. சாஸ்திரி (திருநெல்வேலி), சிவ பிரசாத் (தூத்துக்குடி), அசோக்குமாா் (தென்காசி), திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (தலைமையிடம்) ரமேஷ் பாபு ஆகியோா் கலந்து கொண்டனா்.

இமானுவேல் சேகரன் நினைவு நாளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments