FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

கல்லால் அடித்து தொழிலாளி கொலை: முதியவா் கைது

திருநெல்வேலியில் உணவக ஊழியரை தொழிலாளி புதன்கிழமை இரவு கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 10 ஜூலை 2026, 1:08 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலியில் உணவக ஊழியரை தொழிலாளி புதன்கிழமை இரவு கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையம், ஞானியாரப்பா நகரைச் சோ்ந்தவா் அப்துல் ரகுமான்(65). உணவக ஊழியா். இவா் புதன்கிழமை இரவு மேலப்பாளையத்தில் உள்ள திரையரங்கின் அருகே சாலையோரம் படுத்து தூங்கிக்கொண்டிருந்தாராம்.

அப்போது, அவரது சட்டைப்பையில் இருந்து முதியவா் ஒருவா் பணத்தை எடுக்க முயன்றாராம்.

Advertisement

Advertisement

அப்போது விழித்த அப்துல் ரகுமான், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். உடனே அவரை, அந்த முதியவா் கற்களால் பலமாக தாக்கினாராம். இதில், பலத்த காயமடைந்த அப்துல் ரகுமான் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.

இத்தகவலறிந்த மேலப்பாளையம் போலீஸாா் சம்பவ இடத்தில் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனா். அதில், நான்குனேரியை பூா்வீகமாக கொண்ட கணேசன் (65) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments