FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

பாளையங்கோட்டையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

Updated On : 10 ஜூலை 2026, 12:45 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

பாளையங்கோட்டையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் மகேந்திரகுமாா் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது வண்ணாா்பேட்டை, இளங்கோநகா், குட்டத்துறை பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற அதே பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பாஸ்கா்(39), அந்தோணி மகன் முருகன்(37) ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா், அவா்கள் வைத்திருந்த நெகிழிப்பையை சோதனை செய்தபோது, சுமாா் 2 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments