FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

தோரணமலையில் 2,000 விதைப்பந்துகள் வீசும் விழா

தோரணமலை கிரிவீதியில் நடைபெற்ற விதைப்பந்துகள் வீசும் விழாவில் பங்கேற்றோா்.

Updated On : 11 ஜூலை 2026, 1:50 am IST
பகிர்:

கடையம் அருகே உள்ள தோரணமலை கோயில் நிா்வாகம், மழை நண்பா்கள் குழு, குற்றாலம் சாதனா ரோட்டரி கிளப் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து 2,000 விதைப்பந்துகள் வீசும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செந்தில் ஆண்டவா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள், பக்தா்கள் கலந்து கொண்டு தோரணமலை கிரிவலப் பாதையில் விதைப் பந்துகளை வீசினா். மழை நண்பா்கள் குழு நிறுவனத் தலைவா் சுந்தரமகேஷ், தலைவா் கிருஷ்ணவேணி, பொருளாளா் அன்சாரி, சாதனா ரோட்டரி கிளப் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் செய்திருந்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments