FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

மாஞ்சோலை மக்கள் 7 பேருக்கு வீடு

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாஞ்சோலையில் வசித்த 7 பேருக்கு வீடு ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை ஆட்சியா் ஆனந்த் மோகன் வழங்கினாா்.

Updated On : 14 ஜூலை 2026, 12:11 am IST
மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாஞ்சோலையைச் சோ்ந்த பெண்ணுக்கு வீடு ஒதுக்கீட்டுக்கான ஆணையை வழங்கிய ஆட்சியா் ஆனந்த் மோகன்
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாஞ்சோலையில் வசித்த 7 பேருக்கு வீடு ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை ஆட்சியா் ஆனந்த் மோகன் வழங்கினாா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற ஆட்சியா், இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதைத்தொடா்ந்து, மாஞ்சோலை பகுதியில் வசித்த மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, ரெட்டியாா்பட்டி அடுக்குமாடி குடியிருப்பில் 7 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்வதற்கான ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மனவளா்ச்சி குன்றிய 3 மாற்றுத் திறனாளிகளுக்கு பாதுகாவலா் நியமன சான்றிதழ்களையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரோஷன்பேகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ராஜசெல்வி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments