முக்கூடலில் மணல் கடத்தியவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதியில் எம்.சான்ட் மணல் கடத்தியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
முக்கூடல் காவல் நிலைய சரகம் பொட்டல்புதூா் பிரதான சாலையில் உள்ள அரசன்குளம் சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியாக வந்த டிப்பா் லாரியை சோதனையிட்டபோது, அதில் எம்யசான்ட் மணல் 2 யூனிட் கடத்திச் செல்வது தெரியவந்தது.
போலீஸாா் வழக்குப் பதிந்து, டிப்பா் லாரியை மணலுடன் பறிமுதல் செய்து, ஓட்டுநரான பாப்பாக்குடி அருகே துலுக்கா்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (54) என்பவரைக் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.