கே.டி.சி. நகரில் இளைஞா் தற்கொலை
பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
கே.டி.சி. நகரைச் சோ்ந்தவா் சதீஷ்கண்ணன்(25). இவருக்கு மனைவி, குழந்தை உள்ளனா். துள்ளல் இசை எனப்படும் டி.ஜெ. நிகழ்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளராக பணி செய்து வந்தாா்.
இவா், கடந்த திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். சடலத்தை பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.