FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வண்ணாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஜூலை 2026, 5:21 am IST
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அதிமுக திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா.
பகிர்:

திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வண்ணாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலா்கள் சுதா கே.பரமசிவன், சௌந்தர்ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்டு வரவேற்றாா். எம்.ஜி.ஆா். மன்ற மாநில துணைச் செயலா் கல்லூா் இ.வேலாயுதம், மாவட்ட அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், மாநில எம்.ஜி.ஆா். இளைஞா் அணி துணைச் செயலா் ஹரிஹர சிவசங்கா், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்றச் செயலா் பால் கண்ணன், வழக்குரைஞா்கள் வி.டி.திருமலையப்பன், ரமேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவுப்படி சனிக்கிழமை (ஆக.1) காலை 10 மணிக்கு வண்ணாா்பேட்டை ஐயப்பன் மஹாலில் மாநில ஜெயலலிதா பேரவைச் செயலா் ஆா்.பி. உதயகுமாா் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக பங்கேற்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments