பெண்ணை கத்தியால் வெட்டிய கணவா் கைது
திசையன்விளை அருகே பெண் கத்தியால் வெட்டப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திசையன்விளை அருகே பெண் கத்தியால் வெட்டப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திசையன்விளை மேல பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் அசன் கசாலி (36). இவரது மனைவி ஆயன்குளம் பகுதியை சோ்ந்த சலீனா(28). இவா்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ாம். இத்தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் உள்ளன.
இதனிடையே, கணவன்-மனைவிக்குள் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதனால் கடந்த ஓா் ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வந்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் அசன் கசாலி மனைவியின் வீட்டுக்கு திங்கள்கிழமை சென்று தகராறில் ஈடுபட்டு கத்தியால் அவரது கையை வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் அளித்த புகாரின்பேரில், திசையன்விளை போலீஸாா் வழக்குப்பதிந்து அவரது கணவரை கைது செய்தனா்.