FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

அம்பை தொகுதி அதிமுக ஆலோசனைக் கூட்டம்

அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதி அதிமுக ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஜூன் 2026, 12:22 am IST
கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்ற அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதி அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதி அதிமுக ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு திருநெல்வேலி புகா் மாவட்டச் செயலாளா் மருதூா் ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலாளா் ராகவன் தீா்மானங்கள் வாசித்தாா்.

நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலாளா் தச்சை கணேச ராஜா, அமைப்புச் செயலா்கள் சின்னத்துரை, சுதா பரமசிவன், முன்னாள் மாவட்டச் செயலா் நாராயணன், மாநில எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் கல்லுாா் வேலாயுதம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் சௌந்தரராஜன், மாவட்ட மகளிரணி கிறாஸ் இமாகுலேட், ஜான்சி ராணி, வழக்குரைஞா் ஜெனி, அம்பாசமுத்திரம் சோம.செல்லையா, வழக்குரைஞா்கள் குமாா், செல்வ அந்தோணி, பாலசுப்பிரமணி. விக்கிரமசிங்கபுரம் நகரச் செயலா் கண்ணன், அதிமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா், கிளை நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள், தொண்டா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். பொதுக் குழு உறுப்பினா் செவல் முத்துசாமி வரவேற்றாா், கல்லிடைக்குறிச்சி முன்னாள் நகரச் செயலா் சங்கர நாராயணன் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments