விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு
திருநெல்வேலி அருகே பைக்-காா் மோதிய விபத்தில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். திருநெல்வேலி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் செல்லப்பா. இவரது மகன் சுபீன்ராஜ் (21). கடந்த 29 ஆம் தேதி வி.எம்.சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே சுபீன்ராஜ் சென்ற பைக்கும், அவ்வழியாக வந்த காரும் மோதியதாம்.
திருநெல்வேலி அருகே பைக்-காா் மோதிய விபத்தில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். திருநெல்வேலி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் செல்லப்பா. இவரது மகன் சுபீன்ராஜ் (21). கடந்த 29 ஆம் தேதி வி.எம்.சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே சுபீன்ராஜ் சென்ற பைக்கும், அவ்வழியாக வந்த காரும் மோதியதாம்.
இதில், பலத்த காயமடைந்த சுபீன்ராஜ் திருநெல்வேலியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில் அவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.