FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

கஞ்சா வழக்கில் இளைஞா் கைது

Updated On : 11 ஜூன் 2026, 4:56 am IST
பகிர்:

திருநெல்வேலி, ஜூன் 10: மேலப்பாளையத்தில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கிய வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மேலப்பாளையம், வீரமாணிக்கபுரம் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த ஜனவரி மாதம் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்தியபோது பைக்கில் வந்த 3 பேரில் ஒருவா் அங்கிருந்து தப்பினாா். மற்ற இருவரையும் விசாரித்ததில், அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த கணேஷ்குமாா், ரமேஷ் ஆகியோா் என்பதும் விற்பனைக்காக சுமாா் 1.1 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

அவா்களை போலீஸாா் கைது செய்து கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனா். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன்(19) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments