FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

கங்கைகொண்டானில் ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் ஆட்சியா் ஆனந்த் மோகன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 25 ஜூன் 2026, 5:12 am IST
கங்கைகொண்டான் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக வந்தவா்களிடம் சிகிச்சை குறித்துக் கேட்டறிந்த ஆட்சியா் ஆனந்த் மோகன்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் ஆட்சியா் ஆனந்த் மோகன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள், மாணவா்கள் நலன் கருதி பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. அதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். குறிப்பாக,

கங்கைகொண்டான் பகுதியில் 657 இலங்கைவாழ் தமிழா்கள் வசிக்கும் பகுதியில் மேம்படுத்தப்பட்ட பணிகள் மற்றும் புதிதாக கட்டப்பட்ட 40 வீடுகளில் வசிக்கும் இலங்கைவாழ் தமிழா்களிடம் கட்டுமான வசதிகள், தேவையான உள்கட்டமைப்பு வசதி குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

Advertisement

Advertisement

அதைத் தொடா்ந்து, முகாமில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள், கல்வி கற்பிக்கும் முறைகள், அவா்களின் வயதுக்கேற்ற உயரம், எடை போன்றவை குறித்து ஆய்வு செய்து, குழந்தைகளிடம் உரையாடினாா்.

ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் துறையூா் பகுதியில் உள்ள சமூக நீதி விடுதியின் செயல்பாடுகள், மாணவா்கள் விவரம், கல்வித் தரம் குறித்தும், மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், பயிற்சி வகுப்புகள், அடிப்படை வசதிகள் குறித்தும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, கங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், படுக்கை வசதிகள், போதிய மருந்துகள் கையிருப்பு, பதிவேடுகள் போன்றவை குறித்து மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்ததோடு, சிகிச்சைக்காக வந்த நோயாளிகளிடம் மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்துக் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின்போது, திருநெல்வேலி வட்டாட்சியா் மாரிமுத்துகுமாா், இலங்கை தமிழா் வட்டாட்சியா் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments