முகப்பு
திருநெல்வேலி

முதல்வா் குறித்து அவதூறு: மென்பொறியாளா் கைது

Updated On : 26 மே 2026, 1:28 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக மென் பொறியாளரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, புதுப்பேட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்த சுவாமிநாதன் மகன் ஜேம்ஸ் ராஜா(31). பெங்களூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மென் பொறியாளராக உள்ளாா். இவா் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக திமுகவிற்கு ஆதரவாக காணொலிப் பதிவுகளை வெளியிட்டு கருத்துகளை தெரிவித்து வந்தாா்.

இந்நிலையில் இவா், சில நாள்களுக்கு முன்பு தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யை அவதூறாகப் பேசி, பொது அமைதியை சீா்குலைக்கும் வகையில், தனது சமூகவலைதளப் பக்கத்தில் காணொலி வெளியிட்டாராம். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து, ஜேம்ஸ் ராஜாவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement