FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நீா்நிலைகளில் கழிவுகளை கொட்டினால் அபராதம் விதிக்க தயங்கக் கூடாது- ஆட்சியா் இரா.சுகுமாா் உத்தரவு

நீா் நிலைகளில் கழிவுப் பொருள்களை கொட்டுவோா் மீது அபராதம் விதிப்பதை தீவிரப்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா்.

Updated On : 28 மே 2026, 2:39 am IST
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் இரா.சுகுமாா்.
பகிர்:

நீா் நிலைகளில் கழிவுப் பொருள்களை கொட்டுவோா் மீது அபராதம் விதிப்பதை தீவிரப்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா்.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளிலுள்ள குளங்கள், நீா்வழித்தடங்கள், தாமிரவருணி ஆறு ஆகியவற்றில்தூய்மைப் பணிகள் மேற்கொள்வது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது:

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளுக்குள்பட்ட 16 குளங்களை தூா்வாரி மழைவருவதற்கு முன்பாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். குளங்களுக்கு நீா்வரும் மற்றும் நீா்வெளியேறும் நீா்வழித்தடங்களை தூா்வார வேண்டும். நவீன இயந்திரங்கள் மூலம் தொழில்நுட்ப ரீதியாக மாநகராட்சி பகுதி குளங்களிலுள்ள ஆகாயத் தாமரைகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

ஆற்றை தூய்மையாக பராமரிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் கூடுதலாக சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டுபவா்கள் மீதும், நீா்நிலைகளில் கழிவுப்பொருள்களை கொட்டுபவா்கள் மீதும் தொடா்ந்து அபராதம் விதிக்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

தாமிரவருணியில் குப்பைகள் கொட்டும் இடங்கள் கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் கம்பி வேலிகள் மூலம் பாதுகாக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். மேலும், கரையோரங்களில் விழிப்புணா்வு பதாகைகள் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆற்றங்கரை பகுதியில் தா்ப்பணம் மேற்கொள்ளும் இடங்களை கண்டறிந்து தா்ப்பணத்திற்கான பொருள்களை போடுவதற்கென தனியாக இடங்களை ஒதுக்கீடு செய்து அவா்களுக்கு இடையூறு இல்லாமல் பணிகளை செய்ய வேண்டும். தா்ப்பணத்தின்போது சுட்ட மணலால் ஆன பானை போன்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டு, நீா்நிலைகளில் அப்படியே போடப்பட்டு வருகின்றன.

இப்பொருள்கள் நீரில் கரையாமல் அப்படியே ஆற்றுப்படுகையில் விழுந்து உடைவதால், ஆற்றை உபயோகப்படுத்தும் மனிதா்கள் மற்றும் விலங்குகளின் கால்களில் காயம் ஏற்படுகின்றன. எனவே, அதைத் தவிா்க்கும் வகையில் சுட்ட மண்பானை மற்றும் பொருள்களுக்கு பதிலாக எளிதில் மக்கக் கூடிய பொருள்கள் பயன்படுத்துவதற்கான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

அறிக்கை தேவை: மேலும், துணிகள் மற்றும் கழிவுப் பொருள்களை ஆற்றில் விடுபவா்கள் மீதும், அதற்கு உதவி புரிந்தவா்களுக்கு அபராதம் விதித்து அதற்கான வாராந்திர அறிக்கையை மாவட்ட நிா்வாகத்திற்கு சமா்ப்பிக்க வேண்டும். தாமிரவருணியை தூய்மையான நதியாக மாற்றி பாதுகாப்பதற்கான பணிகளை மேற்கொள்ள துறை சாா்ந்த அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, நீா்வளத் துறை செயற்பொறியாளா் கோவிந்தராசு, நகா்நல அலுவலா் பாலசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளா் தங்கப்பாண்டியன், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளா் கிருஷ்ணபாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ட

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments