தேசிய செஸ் போட்டி: திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா பள்ளி மாணவர் இரண்டாமிடம்
தேசிய அளவிலான செஸ் போட்டியில் திருச்செந்தூர் பள்ளி மாணவர் இரண்டாமிடம் வென்று வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
தேசிய அளவிலான செஸ் போட்டியில் திருச்செந்தூர் பள்ளி மாணவர் இரண்டாமிடம் வென்று வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
இந்திய விளையாட்டு குழுமம் நடத்திய தேசிய அளவிலான செஸ் போட்டி ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரியில் நடைபெற்றது. இப்போட்டியில், தமிழ்நாடு அணிக்காக காஞ்சி ஸ்ரீ சங்கரா பள்ளி மாணவர் ஜா. சக்திவிஷால் பங்கேற்றார். இதில், தமிழ்நாடு அணி இரண்டாம் இடம் பெற்று மாணவர் ஜா. சக்திவிஷால் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவரை பள்ளித் தாளாளர் மருத்துவர் அ. ராமமூர்த்தி, முதல்வர் இரா. செல்வவைஷ்ணவி ராஜன், மேலாளர் கிஷோர் பாபு, ஒருங்கிணைப்பாளர் ஜீனத், உடற்கல்வி ஆசிரியர்கள் சண்முகசுந்தரம், பாலசுப்பிரமணியன், முத்துசெல்வம், சோபனா, மருபி எப்ஸி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.