விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு
தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக பாஜக தேசிய செயலர் எச். ராஜா மீது நடவடிக்கை
தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக பாஜக தேசிய செயலர் எச். ராஜா மீது நடவடிக்கை கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் டி.எஸ்.பி. ஜெபராஜிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
முன்னதாக கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் பிரபாவளவன் தலைமையில், கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் கோரிக்கை மனுவை டிஎஸ்பியிடம் அளித்தனர்.
இதில், விளாத்திகுளம் ஒன்றிய அமைப்பாளர் வில்லாளன், கயத்தாறு ஒன்றிய அமைப்பாளர் அய்யாத்துரை, வணிகரணி ஒன்றிய அமைப்பாளர் கலைச்செல்வன், ஒன்றியச் செயலர் மாடசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.