உடன்குடி மாரியம்மன் கோயில் கொடை விழா
உடன்குடி அருள்மிகு மாரியம்மன் கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.
உடன்குடி அருள்மிகு மாரியம்மன் கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.
இக் கோயில் கொடை விழா கடந்த திங்கள்கிழமை அம்மனுக்கு அலங்கார பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாள்களில் மஞ்சள் குளித்தல், கும்பம் வீதியுலா, முளைப்பாரி ஊர்வலம், பால்குட ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.புதன்கிழமை சிறப்பு பூஜையுடன் விழா நிறைவு பெற்றது.
விழாவில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலச் சங்க மாநிலத் தலைவர் ஆனந்த் பிரேம்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழக மாநிலச் செயலர் ஜெ.தர்மராஜ், கனகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.