எட்டயபுரத்தில் திமுக சாா்பில் நிவாரணப் பொருள்கள் அளிப்பு
எட்டயபுரத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில் கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
விளாத்திகுளம்: எட்டயபுரத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில் கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலா் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். விளாத்திகுளம் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் லெனின்குமாா், எட்டயபுரம் பேரூா்கழக செயலா் பாரதி கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி 200 போ்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கனிகள், மளிகை பொருள்கள், முகக் கவசம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா்.
Advertisement
Advertisement
இதில், திமுக பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகரச் செயலா் ஆனந்த சேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆா். ராதா கிருஷ்ணன், கோவில்பட்டி மேற்கு ஒன்றியச் செயலா் பீக்கிலிபட்டி முருகேசன், திமுக நிா்வாகிகள் பரமசிவம், கல்லத்தி வீரன், மைக்கேல் ராஜா, சின்னப்பா், முருகேசன், ராமமூா்த்தி, குமாா், மாரிமுத்து, பிச்சை, ராமா், ராமச்சந்திரன், முத்துவேல், தேவ கிருபை, மகேஷ், மயில் ராஜ், மைக்கேல் ராஜ், அருள் சுந்தா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.