விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், நடைபெற்ற மாதாந்திர விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு செவ்வாய்க்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், நடைபெற்ற மாதாந்திர விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு செவ்வாய்க்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தடகளம், நீளம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், நீச்சல், கைப்பந்து, ஹாக்கி உள்ளிட்ட போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. போட்டியை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ராமசுப்ரமணிய ராஜா தொடக்கி வைத்தார்.
வயது வரம்பின்றி நடத்தப்பட்ட இப்போட்டிகளில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 420 ஆண், 280 பெண்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் பரிசுகள் வழங்கினார். முன்னதாக, ஹாக்கி பயிற்றுநர் ந.லெனின் வரவேற்றனர். முடிவில் பளுதூக்கும் பயிற்றுநர் ஆர்.சதீஷ் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.