FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இளைஞர்களுக்கு இலவச திறன் வளர்ப்புப் பயிற்சி

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் சார்பில் கரூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு இலவச திறன் எய்தும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

24 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் சார்பில் கரூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு இலவச திறன் எய்தும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சு.வினோத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பயிற்சியில் கட்டுமானம், பெயிண்டர், செல்லிடப்பேசி பழுதுநீக்கும் பயிற்சி, கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி, ஜவுளி, சுகாதாரம், பாதுகாப்பு சேவைகள், மென்திறன் பயிற்சி, பட்டுப்புழு வளர்த்தல், வளைதளப் பயிற்சி, நவீன ஆடையமைப்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

Advertisement

Advertisement

இதற்கான விண்ணப்பங்கள் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடிந்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும். இந்த இலவச திறன் எய்து பயிற்சி மூலம் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புவோருக்கு சுயவேலைவாய்ப்பு கடனுதவி பெற மாவட்ட தொழில் மையம் மூலம் உதவி செய்யப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments