சைக்கிள் - அரசு பேருந்து மோதல்: முதியவர் சாவு
வேலாயுதம்பாளையம் அருகே சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
வேலாயுதம்பாளையம் அருகே சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி (63). இவர், தனது சைக்கிளில் திங்கள்கிழமை சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலத்துறை பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து சைக்கிள் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.