மார்ச் 11-ல் மதன கோபாலசுவாமி கோயில் தேர் வெள்ளோட்டம்
பெரம்பலூர் ஸ்ரீ மதனகோபால சுவாமி கோயில் தேர் வெள்ளோட்டம் மார்ச் 11-ம் நடைபெறுகிறது.பெரம்பலூரில் உள்ள மரகதவள்ளித் தாயார் சமேத மதனகோபால சுவாமி கோயில் தேர் சுமார் 100
பெரம்பலூர் ஸ்ரீ மதனகோபால சுவாமி கோயில் தேர் வெள்ளோட்டம் மார்ச் 11-ம் நடைபெறுகிறது.
பெரம்பலூரில் உள்ள மரகதவள்ளித் தாயார் சமேத மதனகோபால சுவாமி கோயில் தேர் சுமார் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்தத் தேரை புதுப்பிக்கும் பணிகள் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இந்து சமய அறநிலையத்துறை நிதி, பொதுமக்கள் நிதி மற்றும் தர்ம பரிபாலன சங்கத்தால் திரட்டப்பட்ட நிதி என சுமார் ரூ. 40 லட்சத்தில் தேர் புதுப்பிக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், மார்ச் 11-ம் தேதி காலை 10 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.