விரல்ரேகை பிரிவு பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவி மையம்
விரல் ரேகை பிரிவு காலிப் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்போருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
விரல் ரேகை பிரிவு காலிப் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்போருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக காவல் துறையில் விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது ஏற்படும் சந்தேகங்களை போக்கும் வகையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து வேலை நாள்களில் செயல்படும். மேலும் விவரங்களுக்கு 04328-224065 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.