வீட்டில் தனியே இருந்த இளம்பெண் கொலை
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வீட்டில் குழந்தையுடன் தனியாக இருந்த பெண் செவ்வாய்க்கிழமை இரவு கொலை செய்யப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வீட்டில் குழந்தையுடன் தனியாக இருந்த பெண் செவ்வாய்க்கிழமை இரவு கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமயம் அருகேயுள்ள வீரபட்டியைச் சேர்ந்தவர் நேரு மனைவி லாவண்யா(23). நேரு சிங்கப்பூரில் வேலைபார்த்துவருகிறார். லாவண்யா தனது ஒன்றரை வயதுக் குழந்தையுடன் தனி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், புதன்கிழமை காலையில் குழந்தை மட்டும் வீட்டின் வெளியே திரிவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, வீட்டின் சமையலறையில் ரத்தக் காயங்களுடன் லாவண்யா இறந்து கிடந்துள்ளார். வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறிக்கிடத்ததாம். தகவலறிந்து அங்கு சென்ற திருமயம் போலீஸார், உடலை மீட்டு வழக்கு பதிந்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.