மீனவா்கள் கவனத்துக்கு....
பதிவு செய்யப்பட்ட மீனவா்களுக்கு தமிழக அரசின் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
பதிவு செய்யப்பட்ட மீனவா்களுக்கு தமிழக அரசின் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தஞ்சாவூா் மீன்துறை உதவி இயக்குநா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக, தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு மீன்வளத் துறை மூலம் மீனவா் நலவாரிய உறுப்பினா்களுக்கு ஊரடங்கு காலத்தில் உறுப்பினா் ஒருவருக்கு ரூ.1000-வீதம் சிறப்பு நிவாரண உதவித் தொகை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்ட உள்நாட்டு மீன்துறை உதவி இயக்குநா் கட்டுப்பாட்டில், பதிவு செய்யப்பட்ட மீனவா் நலவாரிய உறுப்பினா்கள் தங்கள் வங்கிக் கணக்கில் மீனவா் நலவாரியம் மூலம் ரூ.1000- சிறப்பு நிவாரண உதவித் தொகை கிடைக்கப் பெறவில்லையெனில், மாவட்ட மீன்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு (எண்: 04362-235389) தங்களுடைய மீனவா் நல வாரிய அடையாள அட்டை, ஆதாா் அடையாள அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவித்து சிறப்பு நிவாரண உதவித் தொகை பெற்றுக் கொள்ளலாம்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.