திருச்சியில் இயல்பு நிலை திரும்பியது
திருச்சியில் புதன்கிழமை இரவு இயல்பு நிலை படிப்படியாக திரும்பியது.
திருச்சியில் புதன்கிழமை இரவு இயல்பு நிலை படிப்படியாக திரும்பியது.
திமுக தலைவர் மு. கருணாநிதி செவ்வாய்க்கிழமை மாலை மறைந்ததையடுத்து, அடுத்த சில மணிநேரங்களில் திருச்சி மாநகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் சென்னையில் மெரீனா கடற்கரையில் புதன்கிழமை மாலை கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பத் தொடங்கியது. திருச்சி மாநகர், தஞ்சாவூர், புதுகை உள்ளிட்ட குறுகிய தொலைவு கொண்ட ஊர்களுக்கு குறைந்த அளவில் தனியார் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. மேலும் தேனீர் கடைகள், சாலையோர உணவகங்கள், மத்திய பேருந்து நிலையப் பகுதியில் சில உணவகங்கள் திறக்கப்பட்டன. ஏடிஎம்கள் மற்றும் மருந்துக் கடைகளும் திறக்கப்பட்டன. இருசக்கர வாகனங்கள், இலகு ரக வாகனங்கள் புழக்கம் காணப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.