FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தனியார்மயத்தைக் கண்டித்து திருச்சி விமான நிலைய ஊழியர்கள் டிச. 28-இல் வேலைநிறுத்தம்

விமான நிலையங்கள் தனியார்மயமாவதைக் கண்டித்து, திருச்சியில் விமான நிலைய ஆணையக் குழும  ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். 

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

விமான நிலையங்கள் தனியார்மயமாவதைக் கண்டித்து, திருச்சியில் விமான நிலைய ஆணையக் குழும  ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். 
விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகின்றது.  அண்மையில் ஆமதாபாத்,  ஜெய்ப்பூர், மங்களூர், திருவனந்தபுரம், லக்னௌ, குவஹாட்டி உள்ளிட்ட 6 விமான நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார்மயத்தைக் கண்டித்து விமான நிலைய ஆணையக் குழும ஊழியர்கள் சங்கம் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது. 
கடந்த வாரத்தில் டிசம்பர் 10 முதல் 12  வரையிலான  நாள்களில் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை பகல் நேர உணவு இடைவேளையில் விமான நிலைய வளாகத்துக்குள் கண்டன  ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். விமான நிலைய ஆணையக்குழும ஊழியர்கள் சங்க திருச்சி கிளை தலைவர் யுவராஜேஷ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். 
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து யுவராஜேஷ் கூறுகையில், மத்திய அரசு விமான நிலையங்களை தனியார்மயமாக்கி வருவது கண்டிக்கத்தக்கது. இதனைக் கண்டித்து பல்வேறு வகையிலான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் வரும் வெள்ளி மற்றும் செவ்வாய்க் கிழமைகளிலும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதனையடுத்து டிச. 28 ஆம் தேதி ஒருநாள் அனைவரும் விடுப்பு எடுத்து வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments