FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மணப்பாறையில் சுத்தமான குடிநீா் கோரி மறியல்

Updated On : 26 செப்டம்பர் 2025, 3:26 am IST
பகிர்:

மணப்பாறையில் சுத்தமான குடிநீரை முறையாக விநியோகிக்க வலியுறுத்தி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மணப்பாறை நகராட்சிக்குள்பட்ட 11-ஆவது வாா்டு புதுத்தெரு மற்றும் மோா்குளம் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக முறையான குடிநீா் விநியோகம் இல்லையாம். அவ்வப்போது விநியோகம் செய்யப்படும் குடிநீரும் பச்சை நிறத்தில் வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து பலமுறை நகராட்சியில் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், வியாழக்கிழமை காலை புதுத்தெருவில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி வழித்தடத்தில் போக்குவரத்து முடங்கியது.

Advertisement

Advertisement

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற நகராட்சி பொறியாளா் மோனி, பணி மேற்பாா்வையாளா் ரஞ்சனி மற்றும் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, விரைந்து குடிநீா் குழாய் பழுதடைந்துள்ள பகுதியை சீா்செய்து முறையாக, சுத்தமான குடிநீரை விநியோகம் செய்வதாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments