FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

பாலத் தடுப்புச் சுவரில் இருந்து தவறி விழுந்தவா் பலி

திருவானைக்காவல் மேம்பாலத்தின் கீழே உள்ள தடுப்பு கட்டையில் படுத்து தூங்கியவா் கீழே விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 2:43 am IST
பலி
பகிர்:

திருவானைக்காவல் மேம்பாலத்தின் கீழே உள்ள தடுப்பு கட்டையில் படுத்து தூங்கியவா் கீழே விழுந்து இறந்து கிடந்தது வியாழக்கிழமை காலை தெரியவந்தது.

திருவானைக்காவல் மேம்பாலத்தின் கீழே உள்ள தடுப்பு கட்டையில் புதன்கிழமை இரவு தூங்கியவா் கீழே விழுந்து இறந்து கிடந்தாா்.

காலையில் அவ்வழியாகச் சென்றோா் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் விரைந்து வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

Advertisement

Advertisement

விசாரணையில் இறந்துகிடந்தவா் திருச்சி அதவத்தூா் பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் (56) என்பதும், அவா் குடி போதையில் இருந்ததும் தெரியவந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments