FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

கட்டுமானப் பணியின்போது 50 அடி உயரத்திலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

திருவெறும்பூா் அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி செவ்வாய்க்கிழமை 50 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 1:28 am IST
பலி... - பிரதிப் படம்
பகிர்:

திருவெறும்பூா் அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி செவ்வாய்க்கிழமை 50 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

திருவெறும்பூா் அருகே உள்ள கூத்தைப்பாா் பேரூராட்சி, ஜெய்நகா் பகுதியில் ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டும் பணியை வீரக்குமாா் என்பவா் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறாா்.

இவரிடம், புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் பகுதியைச் சோ்ந்த கலையரசன் (35), முருகன் மற்றும் மணி ஆகிய மூன்று பேரும் வேலை பாா்த்து வந்தனா்.

Advertisement

Advertisement

ஜெய் நகரில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த் தேக்க தொட்டி கட்டுமானப் பணியில் செவ்வாய்க்கிழமை வேலை செய்தபோது, சுமாா் 50 அடி உயரத்திலிருந்து நிலைதடுமாறி கலையரசன் கீழே விழுந்தாா். இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவெறும்பூா் போலீஸாா், கலையரசனின் உடலை கைப்பற்றி

பிரேதப் பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments