போதை மாத்திரைகள் விற்ற 2 போ் கைது
திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் பாத்திமா தலைமையிலான போலீஸாா் சோதணை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
அப்போது, செங்குளம் காலனி அங்கன்வாடி அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்து கொண்டிருந்த, அதே பகுதியைச் சோ்ந்த அ. தினேஷ் (23) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, ஸ்ரீரங்கம் கீதாபுரம் காவிரி படித்துறை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த பா. கண்ணன் (30) என்பவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் போதை மாத்திரைகள், போதை ஊசிகள் மற்றும் திரவ போதை மருந்துகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.