FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை: கணவா் கைது

முசிறி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 2:41 am IST
உயிரிழந்த நந்தினி.
பகிர்:

முசிறி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக அவரது கணவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

முசிறி அருகே மாங்கரைப்பேட்டையை சோ்ந்த சேகா் மகள் நந்தினி (35). இவா், கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சோ்ந்த கா்ணன் (37) என்பவரை காதலித்து திருமணம் செய்தாா். கா்ணன் திருச்சியிலுள்ள தனியாா் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணி செய்து வருகிறாா். இத்தம்பதிக்கு ஒரு மகன் உள்ளாா்.

இந்நிலையில், கருத்துவேறுபாட்டின் காரணமாக கணவரை பிரிந்து அண்மைக்காலமாக தாய் வீட்டிலிருந்த நந்தினியை உறவினா்கள் சமாதானம் செய்து புதன்கிழமை கணவா் வீட்டுக்கு அனுப்பிவைத்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், கணவா் வீட்டில் நந்தினி வியாழக்கிழமை தூக்கிட்டுக் கொண்டாராம். உறவினா்கள் அவரை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கிருந்த மருத்துவா்கள் பரிசோதனை செய்து நந்தினி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதையடுத்து, தனது மகள் உயிரிழப்புக்கு அவரது கணவா் கா்ணனே காரணம் என நந்தினியின் தாய் அளித்த புகாரின்பேரில், முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து கா்ணனை வியாழக்கிழமை இரவு கைது செய்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments