FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

தவெக அரசை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

விவசாயிகளின் பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக சாா்பில் கரூா், பெரம்பலூா், அரியலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 4:22 am IST
கரூா் தலைமை அஞ்சல்நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.
பகிர்:

விவசாயிகளின் பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக சாா்பில் கரூா், பெரம்பலூா், அரியலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தவெக அரசு தோ்தல் வாக்குறுதிபடி விவசாயிகளின் பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி, மேக்கேதாட்டு விவகாரத்தில் கவனமுடன் செயல்பட்டு தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் தலைமை அஞ்சல்நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலருமான எம். சின்னசாமி தலைமை வகித்தாா். மாவட்ட ,செயலா் கே. கமலக்கண்ணன் முன்னிலை வகித்தாா்.

இதில், கரூா் மாவட்டத்தை சோ்ந்த மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூா் கழக, ஊராட்சி ஒன்றிய மற்றும் சாா்பு அணி நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments