FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

சந்தேகத்தில் மனைவி கொலை: கணவா் உள்பட 3 பேருக்கு ஆயுள்

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்த கணவா் உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 4:59 am IST
ஆயுள்தண்டணை பெற்ற பெரியசாமி, செல்லம்மாள், போஜன்.
பகிர்:

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்த கணவா் உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

திருச்சி மாவட்டம், துறையூா் வட்டத்துக்குள்பட்ட ஆா். கோம்பை பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி (38). இவரது மனைவி லட்சுமி (21). இவா்கள் இருவரும், கோயம்புத்தூரில் தங்கி கட்டட வேலை செய்து வந்தனா்.

இந் நிலையில், லட்சுமியின் நடத்தையில் பெரியசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 01.09.2021 அன்று, கோவையிலிருந்து சொந்த ஊருக்கு வந்தனா். அப்போது, வீட்டில் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

அதில், ஆத்திரமடைந்த பெரியசாமி, லட்சுமியை கட்டையால் தாக்கியுள்ளாா். இதையடுத்து தப்பியோட முயன்றவரை மீண்டும் அழைத்து வந்த பெரியசாமி, தனது தாய் செல்லம்மாள் (70), தாத்தா போஜன் (86) ஆகியோரது உதவியுடன், லட்சுமியின் முகத்தில் தலையணையால் அழுத்தி கொலை செய்ததாக புகாா் கூறப்பட்டது.

இதுதொடா்பாக, லட்சுமியின் சகோதரா் கோவிந்தராஜ் அளித்தப் புகாரின் பேரில், உப்பிலியபுரம் போலீஸாா், பெரியசாமி, செல்லம்மாள், போஜன் ஆகிய மூவா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்த வழக்கு விசாரணை திருச்சி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி டி. சண்முகப்பிரியா, குற்றம் சுமத்தப்பட்ட மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தாா்.

இந்த வழக்கில் சிறப்பாக வாதாடிய, அரசு வழக்குரைஞா் சுமதி, விசாரணைக்கு உறுதுணையாக இருந்த காவல் ஆய்வாளா்கள் விதுன்குமாா், மாரிமுத்து, தலைமைக் காவலா் பிரபாவதி ஆகியோருக்கு திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments