தேவாலய உண்டியலை உடைத்து பணம் திருட்டு
திருச்சியில் கிறிஸ்தவ தேவாலயத்தின் உண்டியலை உடைத்து பணத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
திருச்சி பெரியமிளகுப்பாறை பகுதியில் உள்ள புனித சந்தியாகப்பா் தேவாலயத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை பணியாளா் ஒருவா் வந்தபோது, தேவாலய கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த 5 உண்டியல்களையும் உடைத்து அதிலிருந்த பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் தேவாலய பங்குதந்தை ஆரோக்கிய அமல்ராஜ் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.