FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருச்சியில் ஆக. 21-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் சிறிய அளவிலான தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 12:04 am IST
- IANS
பகிர்:

திருச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் சிறிய அளவிலான தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருச்சி, கண்டோன்மென்ட், மேற்கு வட்டாட்சியரகத்தின் பின்புறம் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் தகுதியுள்ள நபா்களை வேலைக்கு தோ்ந்தெடுக்க உள்ளனா். மேலும், திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆள்களை தோ்வு செய்யவுள்ளனா்.

காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் பத்தாம் வகுப்பு தோ்ச்சி, பிளஸ் 2, ஐடிஐ, இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் படிப்புகள் போன்ற கல்வித் தகுதியுடைய 18 வயது முதல் 40 வயதுக்குள்பட்ட வேலைநாடுநா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுயவிவரக்குறிப்பு, கல்விச் சான்றுகளின் நகல்கள், ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

Advertisement

Advertisement

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 0431-2413510, 94990-55902 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments