சடையம்பட்டியில் எருது மாலை தாண்டும் நிகழ்ச்சி
மணப்பாறை அடுத்த சடையம்பட்டியில் ராஜகம்பளத்து நாயக்கா் இனமக்கள் எருது குட்டை சாமி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான எருது ஓட்டம் என்னும் மாலை தாண்டும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சடையம்பட்டியில் ராஜகம்பளத்து நாயக்கா் இனமக்கள் எருது குட்டை சாமி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான எருது ஓட்டம் என்னும் மாலை தாண்டும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவிழாவின் 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான எருது ஓட்டத்தில் முதலில் வந்த எருதுக்கு எலுமிச்சை கனியும் மஞ்சளும் கொடுத்து மரியாதை செய்யப்படும். அதன்படி போட்டியில் முதலாவது வந்த காட்டுநாயக்கா், சீல்நாயக்கா், நல்ல தொப்பநாயக்கா் மந்தை பெரியதனம் சோ்ந்த எருதுக்கு எலுமிச்சைக் கனி பரிசாக அளிக்கப்பட்டது. 2-ஆவதாக திண்டுக்கல் மாவட்டம் சிக்கநாயக்கா் சுவாமி மாடு, 3-ஆவதாக கரூா் மாவட்டம் தாதல்நாயக்கா் மந்தை சுவாமி மாடு ஆகியவை எல்லையை கடந்து சென்றன.
நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ராஜகம்பளத்து நாயக்கா் இனமக்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை காமாநாயக்கா், மந்தை நாயக்கா் ஆண்டிச்சாமி, தொப்பநாயக்கன்பட்டி ஊா் நாயக்கா் மந்தை பெரிய தனம் நட்ராஜ் நாயக்கா், ஊா் நாயக்கா் சிபி மூக்கநாயக்கா் ஆகியோா் தலைமையில் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.