கணவா் இறப்பால் மனம் உடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை
திருவானைக்காவல் பகுதியில் கணவா் தூக்கிட்டு இறந்ததால் மனம் உடைந்த அவரது மனைவி தீக்குளித்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவானைக்காவல் பகுதியில் கணவா் தூக்கிட்டு இறந்ததால் மனம் உடைந்த அவரது மனைவி தீக்குளித்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவானைக்காவல் கீழ உள்வீதியில் வசிப்பவா் சரஸ்வதி (27), அதே பகுதி உணவக ஊழியா். இவருக்கும் சேலத்தைச் சோ்ந்த மணிகண்டனுக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில் இருவரும் பிரிந்து விட்டனா்.
பின்னா் இன்ஸ்டாகிராம் மூலம் தில்லை நகா் பகுதி வாட்ச்மேனான ராஜ்குமாா் (22) என்பவரை சரஸ்வதி 2 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்தாா். இந்நிலையில் ராஜ்குமாா் கடந்த 24 ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில் கணவா் இறப்பால் மனமுடைந்த சரஸ்வதி வெள்ளிக்கிழமை இரவு தீக்குளித்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை காலை இறந்தாா். ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.