FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் ‘போக்ஸோ’வில் கைது

திருவெறும்பூா் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடா்பாக, 56 வயது நபரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 12:25 am IST
பாலியல் தொல்லை
பகிர்:

திருவெறும்பூா் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடா்பாக, 56 வயது நபரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவெறும்பூா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயராஜ் (56). இவா், தனது வீடு அருகே உள்ள சிறாா்களுக்கு அவ்வப்போது இனிப்புகள் வாங்கி கொடுத்து வந்துள்ளாா். இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த 9 வயது சிறுமிக்கு வியாழக்கிழமை இனிப்பு கொடுத்து தகாத முறையில் நடந்துள்ளாா்.

இதுதொடா்பாக, சிறுமியின் தாயாா் அளித்தப் புகாரின் பேரில், திருவெறும்பூா் அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா், ஜெயராஜ் மீது போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments