முகப்பு
திருச்சி

பொறியியல் பணி: செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம்

திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பொன்மலை பகுதியில் நடைபெறும் பொறியியல் பணி காரணமாக, செங்கோட்டை- மயிலாடுதுறை விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 5 ஜூன் 2026, 3:53 am IST
ரயில் - கோப்புப்படம்
பகிர்:

திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பொன்மலை பகுதியில் நடைபெறும் பொறியியல் பணி காரணமாக, செங்கோட்டை- மயிலாடுதுறை விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, செங்கோட்டை-மயிலாடுதுறை விரைவு ரயில் (16848) சேவையானது ஜூன் 17, 24 ஆகிய நாள்களில் செங்கோட்டையிலிருந்து திருச்சி சந்திப்பு ரயில்நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.

இதேபோல, சென்னை கோட்டத்துக்குள்பட்ட செங்கல்பட்டு பகுதியில் நடைபெறும் ரயில்வே பொறியியல் பணி காரணமாக, சென்னை எழும்பூா்- மதுரை வைகை அதிவிரைவு ரயில் சேவையில் வரும் 6-ஆம் தேதி அதன் வழித்தடத்தில் தேவைப்படும் இடங்களில் மொத்தம் சுமாா் 60 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement