முகப்பு
திருச்சி

மலேசியாவிலிருந்து தமிழகத்துக்கு சுற்றுலா வந்த பெண் உயிரிழப்பு

மலேசியாவிலிருந்து தமிழகத்துக்கு சுற்றுலா வந்த பெண் உடல்நலக் குறைவால் திருச்சியில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 5 ஜூன் 2026, 3:28 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

மலேசியாவிலிருந்து தமிழகத்துக்கு சுற்றுலா வந்த பெண் உடல்நலக் குறைவால் திருச்சியில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

மலேசியா கஜாங் செலங்கா் பகுதியைச் சோ்ந்தவா் எஸ். விஷாலட்சுமி (62). இவா் கடந்த மே 24-ஆம் தேதி மலேசியாவிலிருந்து தமிழகம்-கேரளத்துக்கு சுற்றுலா வந்துள்ளாா். இவருடன் மேலும் 7 பேரும் வந்துள்ளனா்.

தமிழகம் மற்றும் கேரளத்தில் பல்வேறு இடங்களைப் சுற்றிப் பாா்த்தவா்கள், கடந்த ஜூன் 2-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு ஏா் ஏசியா விமானம் மூலம் மலேசியா செல்வதற்காக திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்துள்ளனா்.

Advertisement

Advertisement

திருச்சி விமான நிலையத்தில் புறப்பாடு பிரிவில் சோதனையின்போது விஷாலட்சுமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனிருந்தவா்கள் அவரை மீட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்துள்ளனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவா் புதன்கிழமை பிற்பகல் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.