சென்னையில் மோசமான வானிலை: கொல்கத்தா விமானம் திருச்சியில் தரையிறக்கம்
சென்னையில் மோசமான வானிலை காரணமாக, கொல்கத்தா - சென்னை விமானம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை திருப்பிவிடப்பட்டது.
சென்னையில் மோசமான வானிலை காரணமாக, கொல்கத்தா - சென்னை விமானம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை திருப்பிவிடப்பட்டது.
மேற்குவங்க தலைநகா் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வியாழக்கிழமை பிற்பகல் 220 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட்டது. சென்னையில் மழை உள்ளிட்ட மோசமான வானிலை பாதிப்பு காரணமாக, அந்த விமானம் திருச்சிக்கு திருப்பிவிடப்பட்டு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் மாலை 5.50 மணிக்கு தரையிறக்கப்பட்டது.
சுமாா் ஒருமணி நேரம் கழித்து கொல்கத்தா - சென்னை விமானம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்கு சென்னை புறப்பட்டுச் சென்றது. மோசமான வானிலை காரணமாக திருப்பிவிடப்பட்ட விமானத்தால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
Advertisement
Advertisement