என்எஸ்எஸ் முகாம்
கடலூர் பாடலேசுவரர் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம், நத்தப்பட்டு ஊராட்சி, உண்ணாமலைசெட்டிச்சாவடியில் 8 நாள்கள் நடைபெற்றது.
கடலூர் பாடலேசுவரர் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம், நத்தப்பட்டு ஊராட்சி, உண்ணாமலைசெட்டிச்சாவடியில் 8 நாள்கள் நடைபெற்றது.
முகாமில் மாணவர்கள் திரெளபதியம்மன் கோயில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி சாலைகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் துப்புரவுப் பணி மேற்கொண்டனர். மேலும், மரக்கன்றுகள் நடுதல், ரத்ததானம், கண்தானம், உடல் உறுப்புதானம், எய்ட்ஸ், பேரழிவு மேலாண்மை உள்ளிட்ட விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
முகாம் நிறைவு விழாவுக்கு கல்லூரித் தலைவர் வி.முத்து தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் நித்தியானந்தம், துணைத் தலைவர் ஆதிநாராயணன், கிராம கல்விக்குழு பாலசுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரி துணை முதல்வர் வினோத்குமார், திட்ட அலுவலர் மது கருத்துரையாற்றினர். முன்னதாக, கல்லூரி முதல்வர் பாலமுருகன் வரவேற்க, திட்ட துணை அலுவலர் தினேஷ் நன்றி கூறினார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.