காவலர் குடியிருப்பில் தேங்கிய மழைநீரில் மூழ்கி சிறுமி சாவு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள அனந்தபுரம் காவலர் குடியிருப்பு வளாகத்தில் தேங்கியிருந்த மழை நீரில் மூழ்கி 2 வயது சிறுமி உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள அனந்தபுரம் காவலர் குடியிருப்பு வளாகத்தில் தேங்கியிருந்த மழை நீரில் மூழ்கி 2 வயது சிறுமி உயிரிழந்தார்.
அனந்தபுரம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிபவர் தீனதயாளன். அங்குள்ள காவலர் குடியிருப்பில் வசிக்கிறார். இவரது குழந்தை சதீந்தினா(2).
இவர், காவல் குடியிருப்பு வளாகத்தில் புதன்கிழமை மாலை விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது, அப்பகுதியில் இருந்த பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் தவறி விழுந்தார்.
குழந்தையை காணாமல் தேடியபோது, சதீந்தினா மழைநீரில் மூழ்கி இறந்து கிடப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அனந்தபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.