ஜன நாயகன் புதிய வெளியீட்டுத் தேதி: தயாரிப்பாளர் பதில்!
ஜன நாயகன் ஜூன் 3-ஆவது வாரம் வெளியாக வாய்ப்பு...
ஜன நாயகன் திரைப்படம் அடுத்த மாதம் 3-ஆவது வாரம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளங்கள் சிலவற்றில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியாக வரும் ஜூன் 19 என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஆயினும், இதைக் குறித்து படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் உறுதியான பதிலளிக்கவில்லை.
இந்த நிலையில், படத் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா கடந்த வெள்ளிக்கிழமை கோயில் ஒன்றுக்கு வழிபாட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது அவரிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பேசும்போது, “படக்குழு சென்சார் சான்றிதழுக்காக காத்திருப்பதாகத்” தெரிவித்தார்.
Advertisement
Advertisement
அவர் பேசியதாவது : “ஜன நாயகனைப் பற்றி பேசும் இடம் இதுவல்ல. நான் கோயில் வழிபாட்டுக்காக வந்துள்ளேன். ஆனால், நான் ஏற்கெனவே தெரிவித்தபடி, சான்றிதழுக்காகக் காத்திருக்கிறோம். அவர்கள் எந்நேரத்திலும், அதிலும் வெகுவிரைவில் அதைத் தரவிருக்கிறார்கள் என்று நான் உறுதியாக இருக்கிறேன். அதனைத்தொடர்ந்து, வெகு விரைவில் படத்தை வெளியிடுவோம். வேறு எவற்றைப் பற்றியும் பேசும் இடம் இதுவல்ல.
சென்சார் சான்றிதழ் எங்கள் கைகளில் கிடைத்ததும், பட வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்படும். நாங்கள் இப்படத்தை உலகெங்கிலும் மிகப் பிரம்மாண்டமாக வெளியிடுவோம்” என்றார்.